கும்பகோணம், டிச.20- தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்க ளில் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத் தில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜ கோபாலன் தலைமை வகித்தார். சிஐடியு தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.கண்ணன் துவக்கி வைத்து பேசினார். போக்குவரத்து ஓய்வு நலச்சங்க தாமோ தரன், மின்வாரிய ஓய்வூதியர் நலச்சங்கம் மேகநாதன் ஆகியோர் கருத்துரை ஆற்றி னர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழி யர் சங்க மாநில செயலாளர் குரு சந்திர சேகரன் சிறப்புரையாற்றினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழி யர்களுக்கு உடனடியாக ஓய்வு கால பலன் களை வழங்கிட வேண்டும். மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற அனைவரையும், தற்போது பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரப்படுத்தி பழைய ஓய்வு திட்டத்தில் அவர்களை இணைக்க வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா வை காரணம் காட்டி ஆறு மாத அகவிலைப் படி உயர்வு முடக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்க வேண்டிய நான்கு சதவீத அக விலைப்படியையும் வழங்காமல் ஆறு மாதம் கடந்துள்ளது. உடனடியாக நிலுவை யுடன் அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதி யர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி 70 வயதுடைய ஓய்வூதி யர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். முதியோர்களுக்கு ரயில் வண்டிகளில் ஏற்கனவே வழங்கி வந்த கட்டண சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வலியுறுத்தி டிசம்பர் 27 ஆம் தேதி காலை கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு அனைத்து ரயில் பயணிகள் பாது காப்பு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. இதில் அனைத்து ஓய்வூதி யர் சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.