கும்பகோணம், அக்.9 - சிஐடியு தஞ்சாவூர் மாவட்ட 15-வது மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் து.கோ விந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணி யன் சங்க கொடியை ஏற்றினார். வரவேற்பு குழு தலைவர் குருசாமி வர வேற்றார். மாவட்ட துணைச் செயலா ளர் பேர்நீதி ஆழ்வார் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாநாட்டை மாநிலத் துணைத் தலை வர் ஆர்.சிங்காரவேலு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வேலை ஸ்தாபன அறிக்கையை மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் கண்ணன் ஆகி யோர் வாசித்தனர். அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரி சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிஐடியு அகில இந்திய துணைத் தலை வர் மாலதி சிட்டிபாபு நிறைவுரை ஆற்றி னார். வரவேற்பு குழு செயலாளர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார். அக்டோபர் 11 ஆம் தேதி நடை பெற உள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் தஞ்சை மாவட் டத்தில் சிஐடியு-வின் அனைத்து தொழி லாளர்களும் முழுமையாக பங்கேற் பது. கொரோனா காலத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்டுள்ள பயணியர் ரயில் சேவையை மீண்டும் குறைந்த கட்ட ணத்தில் பயணியர் ரயிலாக இயக்க வேண்டும். மணல் மாட்டு வண்டி தொழி லாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட குவாரியை உடனே திறந்து கட்டணத்தை குறைத்து மணல் வழங்கிட வேண்டும். மணல் விற்பனையை தனியாரிடம் தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும்.
தொழிலாளர் நல வாரியத்தில் முறைசாரா தொழிலாளர்களின் பணப் பயனை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். தமிழக அரசு ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட்டு அனைவரையும் நிரந்தர பணியாள ராக பணியமர்த்த வேண்டும். மின்சாரத் துறையில் பணியாளர்களுக்கு வழங்கக் கூடிய பணப்பயனை முடக்கும் வகையில் வாரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். முறைசாரா கட்டு மான தொழிலாளர்களுக்கு, கட்டுமான பணி முடிந்தவுடன் தகுந்த கூலியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். தஞ்சாவூரில் இருந்து பெங்களூருவுக்கும் தஞ்சாவூரில் இருந்து ஊட்டிக்கும், அரசு போக்கு வரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. சிஐடியு தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக மா.கண்ணன், செயலாளராக சி.ஜெயபால், பொரு ளாளராக பி.என்.பேர்நீதிஆழ்வார் உட்பட 22 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.