districts

பிள்ளையார்பட்டியில் உதவித்தொகையுடன் கயிறு பொருட்கள் தயாரிக்க பயிற்சி ஜூன் 28-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு

தஞ்சாவூர், ஜூன்.19 -  ஒன்றிய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம், தஞ்சாவூர் அருகே வல்லம் வழி பிள்ளையார்பட்டியில் உள்ளது. இங்கு கயிறு பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  7 மாத கால கயிறு ஆர்டிசன் பயிற்சி வகுப்பில் 18 முதல் 50 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

உள் பயிற்சி 6 மாதங்கள் மற்றும் இன்டெர்ன்ஷிப் பயிற்சி 1 மாதம் என 7 மாதம் பயிற்சி அளிக்கப்படும்.  மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சிக்கு எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.   பயிற்சியின் போது மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப் படும். பயிற்சி பெறுவர்களுக்கு விடுதி மற்றும் உணவு  வசதிஉண்டு.  இப்பயிற்சி  வரும் 01.07.2024  முதல் தொடங்கப்படும் . இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூல மாகவோ இலவசமாக கயிறு வாரியம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

அல்லது www.coirboard.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அலுவலக பொறுப்பாளர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளை யார்பட்டி,  வல்லம் வழி, தஞ்சாவூர்-613403  என்ற முகவரிக்கு ஜூன் 28-க்குள் அனுப்ப  வேண்டும்.  மேலதிக விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04362-264655 ஐ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.