தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியதாவது: “தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா, தாளடி பரு வத்தில் 2.93 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, இதுவரை 14,345 ஏக்கரில் அறுவடை நடை பெற்றுள்ளது. இதில் 2.83 லட்சம் ஏக்கரில் பயிர் காப்பீடு செய்யப்பட் டுள்ளது.
கடந்த ஜன.7 முதல் 10 வரை பெய்த பருவம் தவறிய மழையி னால், 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவார ணம் வழங்க கணக்கெடுப்பு நடந்து வருகிறது. மேலும் போதிய மழையின்மை யால் தண்ணீர் இல்லாத காரணத் தால் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போகுதல் போன்ற காரணங்களினால் தஞ்சா வூர், பூதலூர், திருவையாறு ஆகிய வட்டாரங்களில் 75 சதவீத சாகு படி குறைந்த 45 கிராமங்கள் கண்ட றியப்பட்டு, உரிய இழப்பீடு வழங்க மாவட்ட அளவிலான கண்கா ணிப்புக் குழு மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இப்கோ-டோக் கியோ பொது காப்பீடு நிறுவனத் தின் மூலம் 6,351 விவசாயிகளுக்கு ரூ.3.69 கோடியும், பியூச்சர் ஜென ராளி இந்தியா இன்சூரன்ஸ் நிறு வனத்தின் மூலம் முதல் தவணை யாக 31,504 விவசாயிகளுக்கு ரூ. 14.59 கோடி என மொத்தம் ரூ.18.28 கோடி இழப்பீட்டு தொகை விவ சாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த இழப்பீடு என்பது வேளா ண்மைத் துறை, வருவாய்த்துறை, புள்ளியியல் துறை ஆகியவை இணைந்து, விவசாயம் செய்யாத வருவாய் கிராமங்களின் அடிப்ப டையில் கணக்கெடுப்பு நடத்தி, அதில் காப்பீடு செய்த விவசாயி களின் வங்கி கணக்குக்கு அனுப் பப்பட்டு வருகிறது
. தஞ்சாவூர் மாவட்டத்தில் விவ சாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய ஏதுவாக கடந்த ஜன.3 ஆம் தேதி முதல் இதுவரை 219 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், 17 சதவீதம் வரை ஈரப் பதம் தளர்வு செய்யப்பட்டு, இது வரை 947 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 207 விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை பணம் வங்கி கணக்கு மூலம் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது” என்றார்.