districts

முத்தரப்பு கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படவில்லை திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளின் போராட்டம் தொடரும் போராட்டக்குழு விவசாயிகள் தகவல்

தஞ்சாவூர், ஜன.25-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் செவ் வாய்க்கிழமை திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள், புதிய ஆலை  நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், ஆலை முன்பாக நடைபெறும் அற வழிப் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை நிலை நிர்வா கம், அப்பகுதியில் உள்ள கரும்பு  விவசாயிகளுக்கு கடந்த 2018-ஆம்  ஆண்டு முதல் கரும்பு வழங்கி யதற்கான தொகையை வழங்க வேண்டும்.  விவசாயிகளின் பெயரில் வங்கி களில் ஆலை நிர்வாகம் முறை கேடாக வாங்கிய கடனை தள்ளுபடி செய்து, அவர்களை கடன் (சிபில்)  பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 57 நாட்களாக ஆலை  முன்பு பல கட்டப் போராட்டங் களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க் கிழமை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் முத்தரப்பு கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் முடிவு கள் ஏதும் எடுக்கப்படவில்லை.

 இதுகுறித்து முத்தரப்பு கூட்டத் தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறு கையில், ‘‘முத்தரப்பு கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரும் பங்கேற்கவில்லை. தற்  போது சர்க்கரை ஆலையை வாங்கி யுள்ள கால்ஸ் நிறுவன ஆலைக்கு ஆதரவான விவசாயிகள், ஆலை யின் நிர்வாகிகள்தான் பங்கேற்ற னர். விவசாயிகளின் பிரச்சனை களுக்கு தீர்வு காணும் வகையில், விவசாயிகள் அடங்கிய ஒரு குழு வை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே  கூறினோம். அந்த குழுவில் பாதிக் கப்பட்ட விவசாயிகள் யாரும் இடம்பெறவில்லை. எனவே அந்த குழுவை திருத்தி அமைக்குமாறு கோரிக்கை விடுத்தோம். மேலும், விவசாயிகள் பெயரில் எந்தந்த வங்கிகளில் கடன் வாங் கப்பட்டுள்ளது என்ற முழுவிவரம் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை.  வங்கியாளர்களும் முழுமையாக பங்கேற்கவில்லை. இந்த  கோரிக்கைகளை முன்வைத்த போது, அதை யாரும் ஏற்க வில்லை. எனவே கூட்டத்தில் எந்த  முடிவும் எட்டவில்லை’’ என்றார். இதுகுறித்து போராட்டக் குழுவில் இடம்பெற்றுள்ள விவ சாயிகள் கூறுகையில், ‘‘போராட்  டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி களை தனியாக அழைத்து மாவட்ட ஆட்சியர் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக உள்ள விவசாயிகளை கொண்டே முத்தரப்பு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தியுள்ளார். எங்க ளது எந்த கோரிக்கைக்கும் தீர்வு  காணவில்லை. எனவே போராட் டம் தொடர்ந்து நடைபெறும்’’ என்றனர்.