தஞ்சையில் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கைப்பந்து போட்டி பிப்ரவரி 3, 4, 5 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் போட்டிக்கான இலச்சினை (Logo) பேருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.