தஞ்சாவூர், ஜன.24- தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பொலி வுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத் தப்படும் என தஞ்சாவூர் மாநகராட்சி ஆணை யர் சரவணக்குமார் தெரிவித்தார். தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களிலுள்ள கடைகள், வணிக வளாகங் கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட் டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி ஆணை யர் சரவணக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறு கையில், “தஞ்சை மாநகரில் புதிதாக கட்டடம் கட்டுபவர்கள் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்றே கட்ட வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் தேவையான அள வில் வாகன நிறுத்தத்திற்கு இடவசதி இருக்க வேண்டும். ஒவ்வொரு பொது கட்டடங்களி லும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயம். ஆண்டுதோறும் கட்டட உரிமம் வட்டாட்சி யரிடம் சமர்பிக்கப்படும் போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். கண்காணிப்பு கேமரா பொருத்தினால் குற்ற செயல்கள் வெகுவாக குறையும். ஒரு வேளை குற்றச்செயல் நடந்தால் குற்றவாளி களை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க உதவும். பொது இடங்களில் குப்பைகளை கட்டுவது, போக்குவரத்து விதிமீறல்கள் கண் காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான கட்டுப்பாட்டு மையம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களி லுள்ள பொது கட்டடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வரு கின்றனர். கண்காணிப்பு கேமரா பொருத்த வில்லை என்றால் அது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கப்படும். அப்படியும் பொருத்த வில்லை என்றால் அனுமதி ரத்து செய்யப்ப டும். தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் பொலி வுறு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.