districts

மே 17-ல் பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்  

தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில், மே 17 (செவ்வாய்) அன்று காலை 11 மணி யளவில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடை பெறவுள்ளது.  இதில், பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டத்திற் குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார். 

;