தஞ்சாவூர், ஜூன் 4- சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிர மிப்பு செய்துள்ள, அரசுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக் குழு சார்பில் தஞ்சை ரயி லடியில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையை அடுத்த திருமலை சமுத்திரத்தில் தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக நிர்வாகம், தமிழக அரசின் சிறைத் துறை, திறந்த வெளி சிறைச்சாலை அமைப்பதற்காக ஒதுக்கிய, 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிர மித்து, 24 கட்டிடங்களை கட்டி உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும் பல்கலைக்கழக நிர்வாகம் நிலத்தை ஒப்படைக்காமல் உள்ளது. இதையடுத்து தமிழக அரசு நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி (ஐஏஎஸ்) தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு தஞ்சை வந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட கட்டி டங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த கட்டிடங்களை நான்கு வாரங்களுக்குள் அதாவது கடந்த மார்ச் 24 ஆம் தேதிக் குள் அகற்றிக் கொள்ள வேண்டுமென தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிப்பாணை வழங்கினார்.
ஆனால், சாஸ்த்ரா பல்கலைக் கழகம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள நிலம், நீதிமன்றத் தீர்ப்பின் படி, இதுவரை கையகப்படுத்தப்படா மல் உள்ளது. எனவே, உடனடியாக நீதி மன்ற தீர்ப்பின்படி, அரசு நிலத்தை கைய கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கண்டன உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அடிப்படையில் இந்தியா என்பது இரண்டு இந்தியாக்களாக இருக்கிறது. ஒன்று ஒளிரும் இந்தியா இன்னொன்று வறுமையில் உழலும் இந்தியா. இந்தியா வளர்கிறது என்று பிரதமர் மோடி சொல்கிறார். இந்தியாவில் இருக் கும் ஏழைகள் வாழ்க்கை உயர்ந்துள் ளதா என்றால் இல்லை. மாறாக அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின், பெரு முத லாளிகளின் வாழ்க்கைத்தரம் தான் உயர்ந்துள்ளது. அவர்கள்தான் வளர்ந்துள்ளனர். ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமே வளர்ந்துள்ளனர். மாறாக பெரும்பாலான ஏழைகளின் வாழ்க்கை தரம் இன்னும் அடி மட்டத் திலேயே உள்ளது. காவல்துறை, அரசு இயந்திரங்கள் பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியாக வும், ஏழைகளுக்கு ஒரு மாதிரியாகவும் தான் நீதி வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏழை கள் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தால் அவர்களை அகற்ற புல்டோசர் வரு கிறது.
ஆனால் பல இடங்களில் பேருந்து நிலையங்கள் இருப்பது, அரசு அலுவலக கட்டிடங்கள் இருப்பது, மாவட்ட ஆட்சி யர் அலுவலகம், காவல் கண்காணிப்பா ளர் அலுவலகம் இருப்பது, ஏன் இன்னும் சொல்லப்போனால் மதுரை உயர் நீதி மன்றம் இருப்பது எல்லாமே நீர்ப்பிடிப்பு பகுதியில்தான். வசதி படைத்தவர்கள், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், கல்வி நிலையங்கள் கட்டியிருந்தால் அங்கெல்லாம் உங்கள் சட்டம் பாயாது. காவல்துறையின் அடி அந்த பெரிய கட்டி டங்கள் மீது படாது. ஆனால் பாதிக்கப் படுவது ஏழைகள்தான். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது காகிதத்தில் சீனி, சர்க்கரை என்று எழுதி வைத்த கதைதான். எதார்த்தத்தில் அப்படி கிடையாது, சாதாரண மக்கள் ஆக்கிரமித்து குடியிருக்கும் இடத்தில் நோட்டீஸ் வழங்குவது கிடையாது. குடியிருக்கும் பண்ட பாத்திரங்கள், படிக்கும் புத்தகங்களை எடுக்கக் கூட நேரம் தராமல், அவகாசம் தராமல், அரசு இயந்திரங்கள் நாசம் செய்து விடுகின்றன. புல்டோசர், ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தஞ்சை சாஸ்த்ரா கல்வி நிறுவனம் 37 வருடங்களாக அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. ஆனால் ஆளுகிற அரசோ, இதுவரை ஆண்ட அரசுகளோ எந்த நடவடிக்கை யும் இதுவரை எடுக்கவில்லை. ஏன் அர சாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. சாஸ்த்ரா நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்தது உண்மையா இல்லையா? உண்மை என்றால் ஏன் இதுவரை நடவ டிக்கை எடுக்கவில்லை” என்றார். இதில், மாவட்டச் செயற்குழு, மாவட் டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.