தஞ்சாவூர், டிச.3 - எல்ஐசி பாலிசிகளுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஆயுள் காப்பீடு முகவர்கள் கூட்ட மைப்பு (LIAFI) சார்பில் செவ்வாயன்று தர்ணா நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு தஞ்சாவூர் கோட்டத் தலைவர் வி.செல்வ கணேசன் தலைமை வகித்தார். அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பி.கோகுல கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தஞ்சா வூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கூட்ட மைப்பின் தென் மண்டல பொருளாளர் கே.முரளி, எல்ஐசி ஊழியர்கள் சங்க தஞ்சா வூர் கோட்டத் தலைவர் எஸ்.செல்வராஜ், எஸ்ஆர்எம்யூ திருச்சி கோட்ட துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வீரசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.
தர்ணாவில், முகவர் குரூப் இன்சூரன்ஸ் வயதை உயர்த்த வேண்டும். எல்ஐசி பாலிசி களுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். முகவர் கமிஷன் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும். பாலிசி தாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். பாலிசிக்கான நுழைவு வயதை உயர்த்த வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.