தஞ்சாவூர், ஜூன் 24- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே ஆலத்தூர் கிரா மத்தில், கடைமடைப் பகுதி ஒருங்கி ணைந்த விவசாயிகள் சங்கத்தினருக்கு (கைஃபா), 200 ஏரிகள் மற்றும் குளங் களை தூர்வாரி சாதனை படைத்த தற்கு பாராட்டு விழா சனிக்கிழமை யன்று நடைபெற்றது.
ஆலத்தூர் கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் வி.பாரதி தாசன் தலைமை வகித்தார். உச்சநீதி மன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சிறப்புரையாற்றினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரா.சுரேஷ் குமார், பி.புகழேந்தி, கே.கே.ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். கைஃபா அமைப்பினருக்கு, நீதிபதி கள் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கி னர். இதில் ஆயிரம் நீர் நிலைகள் சீர மைப்பு துவக்க விழாவும் நடை பெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசியதாவது:
நீரின் மகத்துவத்தை உணர்ந்த வர்கள் பண்டைய தமிழர்கள். அதை நாம் இழந்துவிட்டோம். சிந்து சமவெளி முதல் கொடுமணல் வரை மனிதனின் வாழ்க்கை நீரையொட்டி அமைந்திருந் தது. தற்போது, நீரின் மகத்துவத்தை அறியாமல் அழிக்கத் துவங்கி விட்டோம். ஆகையால்தான் நாம் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டி ருக்கிறோம். ஆறுகள், கிணறுகள், குழாய்கள், கேன்களில் நாம் தண்ணீரைப் பார்த்துவிட்டோம்.
வருங்காலத்தில் மாத்திரையாக தண்ணீரை அருந்தும் நிலைகூட வரலாம். தில்லியில் குடிநீருக்காக சண்டையிடுகிறார்கள். இதைப் பார்த்தும்கூட நாம் பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறோம். நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வழித்தடங்களை அழித்து, கட்டடம் கட்டிவிட்டோம் சுற்றுப்புறச் சூழலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. போர் வெல் போட்டு தண்ணீரை எடுத்துக் கொண்டே இருப்பதால் மண்ணில் பிடிப்பு தன்மை மறைந்து, கட்டடங் களுக்கு ஆபத்தாகிவிடும்.
சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமானது. விவ சாயிகள், ஏழைகள், பெண்கள், முதி யவர்கள் அதிகளவில் பாதிக்கப்படு கிறார்கள். ஒரு மருத்துவமனை, பள்ளிக் கூடம், கோவில் கட்டுவதைவிட ஒரு குளத்தை தூர்வாருவது புனிதமான செயலாகும். எனவே, நீர் மேலாண்மை யை முறையாக நாம் கையாள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விவசாயிகள் இல்லையெனில் கிராமங்கள் இல்லை
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பேசுகையில், “கிராமங் களில் கூட இன்றைக்கு கேன் தண்ணீரை குடித்து வருகிறார்கள்.நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. விவசாயிகள் இல்லை என்றால் கிராமங்கள் இல்லை. விவசாயத்திற்கு அடிப்படைத் தேவை நீர் ஆதாரம். நீர் ஆதாரத்தின் மகத்துவத்தை நாம் உணரவில்லை.
கைஃபா அமைப்பினர் பல்வேறு கண்மாய்களை தூர்வாரியதால் கடைமடை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஒரு ஆண்டு கோயில் திருவிழாவிற்கு ஆடல் - பாடல் நிகழ்ச்சிக்கு ஆகும் செலவை, தூர்வாரு வதற்கு இந்த அமைப்பினர் பயன் படுத்தியுள்ளனர். இது இளைஞர் களால் துவங்கப்பட்டு மக்கள் இயக்க மாக மாறியது. இந்த 200 ஆவது நீர்நிலை, 2000 ஆவது நீர்நிலையாக உயர வேண்டும்.
இளைஞர்களை ஆக்க சக்தியாக நாம் பயன்படுத்தினால், அவர்களை எந்தளவுக்கு கொண்டு வர முடியும் என்பதற்கு இந்த கைஃபா அமைப்பினர் ஓர் உதாரணம். அரசாங்கம் செய்ய வேண்டியதை விவசாயிகள் செய் கிறார்கள். ஆனால் அரசுதான் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை செய்யும் அரசு, தனி நபர் அமைப்புகள் தூர்வாரும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கக் கூடாது. விவசாயிகளுக்கு அடிப்படை தேவையான ஏரி, குளங்களை அரசு தூர்வார வேண்டும்” என்றார்.
விழாவில் ஜல்சக்தி மண்டல இயக் குநர் சிவக்குமார், தமிழ்நாடு அரசு கூடு தல் வழக்கறிஞர் வீரகதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர், லாரல் பள்ளி தாளாளர் பால சுப்பிரமணியன், கைஃபா தலைவர் கார்த்திகேயன் வேலுச்சாமி, செயலாளர் பிரபாகரன், பொருளாளர் தங்க.கண்ணன், கைஃபா குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.