கும்பகோணம் நவ.18 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக அரசு அனைத்து கல்லூரி விடுதிகளிலும் செம்மொழி நூலகம் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கும்பகோணம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் செம்மொழி நூலகம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், மாநகர துணை மேயர் சு.ப.தமிழழகன், தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் க.செந்தில்குமார், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் கே.ரேணுகாதேவி, பெருபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே.பாஸ்கர் மற்றும் கல்லூரிகளின் காப்பாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.