districts

img

கார்த்தி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி போட்டி

கும்பகோணம்,  அக்.16 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் முன் னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின்  பிறந்த நாளை முன்னிட்டு  எல்கேஜி முதல் 12 ஆம்  வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு களை காட்சிப்படுத்தும் அறி வியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு  விருந்தினராக கும்பகோ ணம் மாஸ் அறிவியல் கல்லூ ரியின் முதல்வர் சரவணன் கலந்து கொண்டு, மாணவ-  மாணவிகளின் புதிய அறி வியல் கண்டுபிடிப்புகளை பார்த்து வாழ்த்து தெரிவித் தார். மேலும், விஞ்ஞானி அப்துல் கலாமை நினைவு படுத்தும் விதமாக, மாணவ-மாணவியர்களுக்கு சிறப்பு  வினாடி-வினா நிகழ்ச்சி நடத் தப்பட்டு, இதில் வென்ற வர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன. இக்கண்காட்சி யில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் ஆர்வமாக பங்கேற்று தங்களது அறிவியல் கண்டு பிடிப்புகளை காட்சிப்படுத்தி னர். இக்கண்காட்சியில், நடக்கும் இயந்திர ரோபோ மனிதன், தீயணைப்பு கருவி,  நிலநடுக்க எச்சரிக்கை கருவி, கழிவு நீரோடைகளில் பூச்சிக்கொல்லி இல்லா கொசு ஒழிப்பு திட்டம், ட்ரோன், தானியங்கி தெரு விளக்கு, சூரிய ஒளியில் இயங்கும் மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வகை யான அறிவியல் கண்டு பிடிப்புகளை மாண வர்கள் காட்சிப்படுத்தினர். கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து மாண வர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியை பள்ளி  தாளாளர் எஸ்.ஜே.கார்த்தி கேயன், ‘இன்றைய மாணவர்களே நாளைய விஞ்ஞானிகள்’ என்ற தொலை நோக்கு பார்வையுடன் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளி  தாளாளர்  பூர்ணிமா கார்த்திகேயன் சிறப்புரை யாற்றினார். பள்ளி முதல்வர்  த.அம்பிகாபதி வரவேற்றார்.