தஞ்சாவூர், ஜன.20- ஐ.டி.ஐ.-இல் இரு ஆண்டு கள் படித்தால் வேலை தயா ராக உள்ளது என தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அமைச் சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாணவர்களி டம் பேசுகையில், ‘‘தமிழ கத்தில் உள்ள 91 அரசு ஐ.டி.ஐ-களில் தேவை யான உபகரணங்கள் வாங்குவதற்காக தமிழக முதல்வர் ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்தார். இதில், தஞ்சாவூர் ஐடிஐக்கு ரூ.30 கோடி வழங்கப்பட்டது. ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற மேலை நாட்டு மாணவர்களுக்கு இணையாக தமிழகத்திலுள்ள ஐடிஐ மாணவர்களும் ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் போன்ற நவீன முறைகளில் பயிற்சி பெறும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும், 71 ஐடிஐகளில் தலா ரூ.3.70 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களைக் கட்டு வதற்கான பணிகள் நடைபெறுகிறது. இப்பணி முடிந்த பிறகு நவீன வசதி மற்றும் தொழில்நுட்பங்களுடன் மாணவர்கள் படிக் கும் சூழ்நிலை ஏற்படும். தமிழ்நாட்டிலுள்ள அரசு ஐடிஐ-களில் நிக ழாண்டு மாணவர் சேர்க்கை 93 சதவீதமாக உள்ளது. ஐடிஐ-களில் படிக்கும் மாணவர் களுக்கு தமிழக முதல்வர் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கு முனைப்புடன் செயல் படுகிறார். எனவே, ஐடிஐ-இல் இரு ஆண்டு கள் படித்தால், உடனடியாக வேலை தயா ராக உள்ளது’’ என்றார். பின்னர், மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் மூலம் நடத்தப்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற வர்களுக்கு அமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் துரை. சந்திரசேகரன் (திருவை யாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.