districts

img

பேராவூரணி வட்ட அலுவலகத்தில்  கிராம உதவியாளர் நேர்முகத் தேர்வு

 பேராவூரணி, டிச.28- தஞ்சை மாவட்டம் பேராவூரணி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில், 10 கிராம உதவியாளர் பணியிடங்  கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு கடந்த டிச.4 ஆம் தேதி குமரப்பா பள்ளியில் நடைபெற்றது.  பேராவூரணி பகுதியில் விண்ணப்பித்த 638 பேரில்  512 பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வுக்கு 126 பேர் வரவில்லை. இந்நிலையில், தேர்வு எழுதிய 512 பேருக்கும் டிசம்பர் 22-ஆம் தேதி முதல் பேராவூரணி வட்ட அலுவல கத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.  வட்டாட்சியர் சுகுமார், தனி வட்டாட்சியர் பாஸ்கரன், துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் நேர்காணலை நடத்தி வருகின்றனர். காலை 20 பேருக்கும், மதியம் 20 பேருக்கும் என தினசரி 40 பேருக்கு நேர்காணல் நடை பெற்று வருகிறது.  512 பேரில் 10 பேர் கிராம உதவியாளர்களாக தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர். நேர்முகத் தேர்வு நியாயமான முறை யில் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்படுகிறது.  நேர்முகத் தேர்வு காரணமாக பேராவூரணி வட்ட அலு வலகத்தில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை தனிப் பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலையில் பெட்டியைத் திறந்து வருவாய்த்துறையினர் மனுக்களை பரிசீலனை செய்கின்றனர்.