குடவாசல், ஜூலை 1 - நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சனம் செய்த பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய கோரியும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மனிதத் தன்மையற்ற தாக்குதலை கண்டித்தும், வெறுப்பு அரசியலை தூண்டும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை கண்டித்தும் மத நல்லிணக்கத்தை போற்றும் நிகழ்வாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திறந்தவெளி கருத்தரங்கம் நன்னிலம் ஒன்றியம் கொல்லுமாங்குடியில் கடைவீதியில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித்தார். கொல்லுமாங்குடி ஜாமத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு சாலி பார்ட்டி மாநில குழு உறுப்பினர் பி.முகமது நாசர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியில் பேரளம், கொல்லுமாங்குடியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.வீரபாண்டியன், ஜெ.முகமதுஉதுமான், எஸ்.எம்.சலாவுதின், நகரச் செயலாளர் சீனி.ராஜேந்திரன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.