districts

சொர்ணக்காடு கிராமத்தில் அடிக்கடி அறுந்து விழும் மின்கம்பி

தஞ்சாவூர், நவ.23-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றி யம், சொர்ணக்காடு கிராமத்தில் 140 மீட்டர் தூரத்திற்கு இடையில் மின்கம்பம் இல்லாமல், மின்கம்பி செல்வதால் அடிக்கடி அறுந்து விழு கிறது. எனவே, உயிர்ப்பலி ஏற்படும் முன் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் சார்பில் மின்வாரிய உயர்  அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- செங்கமங்கலம் மின்வாரிய அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள சொர்ணக்காடு கிரா மத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு மின் மாற்றியிலிருந்து செல்லும் மின்கம்பி நடு வில் உள்ள ஒரு மின்கம்பத்தை தொடாமல் செல்கிறது. ஒவ்வொரு 70 மீட்டர் தூரத்திற்கும் இடையில் உள்ள  மின்கம்பத்தில், மின்கம்பி களை இணைத்து கட்டவேண்டும். ஆனால், இடையில் உள்ள மின்கம்பத்தில் கட்டப்படாமல் 140 மீட்டர் தூரத்தில் உள்ள மின்கம்பத்தில் மின்கம்பிகள் கட்டப்பட்டுள்ளதால் அடிக்கடி அறுந்து விழுகிறது.  இதுகுறித்து, செங்கமங்கலம் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் கம்பி அறுந்து விழுந்து உயிர்ப்பலி ஏற்  படும் முன் உரிய  நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.