பட்டுக்கோட்டை டிச.9 - பட்டுக்கோட்டை அருகே கி.பி. 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புராதனவனேஸ்வரர் கோவிலில் இருந்து மூன்று ஐம்பொன் சிலை களை திருடி சென்ற மர்மநபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத் தில், அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியநாயகி அம்பாள் சமேத புராதனவ னேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தற்கான வரலாற்று ஆவணங்களும், கல்வெட்டுகளும் உள்ளன. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றது இத்தலம். இக்கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள் திருவாரூர் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த 2001 ஆம் ஆண்டு உபயதாரர்களால் உலோக நடராஜர், அம்பாள், சோமஸ்கந்தர் சிலைகள் வழங்கப் பட்டது. இந்த சிலைகள் கோவிலில் உள்ள நட ராஜர் சன்னதியில் வழிபாட்டிற்காக வைக்கப் பட்டிருந்தது. இச்சிலைகள் அறநிலையத் துறை ஆவணங்களில் பதிவு செய்யப்படா மல் இருந்துள்ளது. இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரண மாக மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலை பயன்படுத்தி வியாழக்கிழமை இரவு கோவி லின் வலதுபுற சுற்றுச்சுவர் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள், நடராஜர் சன்னதி யில் இருந்த 4 அடி உயரம் கொண்ட அமர்ந்த நிலையிலான அம்மன், ஒரு அடி உயரம் கொண்ட சோமஸ்கந்தர், வெண்கலத் தால் ஆன நடராஜர் சிலைகளை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை கோவில் பணியாளர்கள் கோவிலை திறந்த போது, சிலைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் திருச்சிற்றம்பலம் காவல்துறை, அறநிலையத்துறை அதிகாரி களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத் திற்கு வந்த திருச்சிற்றம்பலம் காவல்துறை யினர் கோவிலை சோதனை செய்த போது, கோவிலில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா ஒயர்களை துண்டித்து விட்டு, சிலை களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் அமுதா, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்கா ணிப்பாளர் பிரித்விராஜ் சவுகான் ஆகியோர் கோவில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.