districts

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் 4-வது வாரம் மேலாண்மை மறுகட்டமைப்பு

தஞ்சாவூர், மே 8 - தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக மே 7 அன்று 468 அரசு தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, பள்ளி மேலாண்மை  குழு உறுப்பினர் புதிதாக தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 468 அரசு  தொடக்கப் பள்ளிகளில், பள்ளி மேலாண் மைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள் ளது. இதில், புதிய பள்ளி மேலாண்மைக் குழு  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத்  தலைவர், கல்வியாளர், உள்ளாட்சி பிரதிநிதி கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  தஞ்சாவூர் ஊரகம், மேலவஸ்தாசாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பை  பார்வையிட்டார். இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 207 அரசு நடுநிலைப் பள்ளிகளிலும், 940 அரசு தொடக்கப் பள்ளி களிலும் மூன்று கட்டங்களாக பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நடை பெற்றுள்ளது.  மேலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நி லைப் பள்ளிகளில், 2022 ஜூன் நான்காவது வாரம் பள்ளி மேலாண்மை குழு மறுகட்ட மைப்பு நடைபெறுகிறது என தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக் குமார் தெரிவித்தார்.  விளத்தூர்  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் மஞ்சக்குடி ஊராட்சி விளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. மேற்பார்வையாளர் அருளானந்தம் தலைமை  வகித்தார். கூட்டத்தை மஞ்சக்குடி ஊராட்சி  மன்ற தலைவர் ராமாமிருதம் திருப்பதி சிறப்பித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்  தலைவர் மற்றும் அதற்கான உறுப்பினர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதிதாக  நியமிக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பொறுப்பாளர்களை, மஞ்சக்குடி  ஊராட்சி மன்ற துணை தலைவரும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மணமேல்குடி ஒன்றிய  செயலாளருமான கரு.ராமநாதன் வாழ்த்தி பேசினார்.

மெலட்டூர்
மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி  வெண்ணுக்குடி, எடக்குடி, கொத்தங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில்  பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் நடந்தது. கொத்தங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைவராக சந்திரகலா, துணைத் தலைவராக ரஞ்சனி, பள்ளித் தலைமையாசிரியர் சித்ரா உள்பட 20 பேர் தேர்வாகினர். வெண்ணுக்குடியில் தலைவராக சுகன்யா, துணைத் தலைவராக கலைச்செல்வி, தலைமையாசிரியர் ராஜாத்தி உள்பட 20 பேர் தேர்வாகினர். எடக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைவராக ராதிகா, துணைத்  தலைவராக செல்வி, பள்ளித் தலைமையாசிரி யர் ஜாக்குலின் உள்பட 20 பேர் தேர்வாகி னர்.