தஞ்சாவூர், அக். 31 - தஞ்சாவூரில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 359 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட, பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள் 22 பேருக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசாக ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ. 92 ஆயிரத்திற்கான காசோ லையினை வழங்கினார். மேலும் மாவட்ட ஆட்சி யர் 2019 ஆம் ஆண்டிற்கு படைவீரர் கொடிநாள் வசூ லில், ரூ.4,55,500 வசூலித்து சாதனை படைத்த அப்போதைய மாநகராட்சி ஆணையரும், தற்போ தைய மாநகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக உள்ள பி.ஜானகி ரவீந்திரனுக்கு, அரசு தலைமை செயலாளரின் பாராட்டுச் சான்று மற்றும் 30 கிராம் வெள்ளி பதக்கத்தினையும் வழங்கினார்.