பேராவூரணி, ஜன.11- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா வாடிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், வட்டாரக் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி தலைமையில் நடை பெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் கலா ராணி, வட்டார வளமைய மேற்பார்வை யாளர் முருகேசன், இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் செ.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேக ரன் வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், நடனப் போட்டி கள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், ஆசிரியர் பயிற்றுநர்கள் முனிராஜ், சிவ முருகன், பள்ளி மேலாண்மைக் குழு தலை வர் செல்வராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புனல் ரவி, ஆசிரியை புஷ்ப லதா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். சமத்துவ பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.