districts

img

கும்பகோணத்தில் கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி துவக்கம்

கும்பகோணம், அக்.11 - கும்பகோணத்தில் மாநில அளவி லான கைத்தறி விற்பனை கண்காட்சி  அக்.23 ஆம் தேதி வரை நடை பெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் மகாமக குளம் தென்கரை யில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில், இந்திய அரசின் கைத்தறி ஜவுளித் துறை அமைச்சகம் மற்றும்  தமிழ்நாடு அரசின் கைத்தறித்துறை இணைந்து நடத்தும் மாநில அளவி லான அரசு கைத்தறி கண்காட்சி கும்ப கோணம் எம்எல்ஏ அன்பழகன் தலை மையில் தொடங்கியது.  இதனை மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் துவக்கி  வைத்தார். துணை மேயர் சு.ப.தமிழ ழகன் முன்னிலை வகித்தார். கைத்தறித் துறை இணை இயக்குநர் செல்வம் வரவேற்றார். இக்கண்காட்சியில் ஈரோடு, திரு வண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை, இராமநாதபுரம், திண்டுக் கல், திருச்செங்கோடு, சேலம், திரு நெல்வேலி, திருவாரூர், கோயம்புத் தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 60 ஸ்டால்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் நெசவாளர் சேவை மையம் சென்னை மற்றும் ஜவுளிக்குழு கரூர் ஆகியவற்றின் பிரத்யேக விளக்க அரங்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் கண்கவர் டிசைன்களில் அசல் வெள்ளி ஜரிகை பட்டு புடவை கள், ஆஃபைன் ஜரிகை பட்டுப்புட வைகள், காட்டன் புடவைகள், வேஷ்டி கள், போர்வைகள் பலவண்ண படுக்கை விரிப்புகள், துண்டுகள், கைலிகள் ஆகியவை விற்ப னைக்கு தயார் நிலையில் உள்ளன.  இந்த கைத்தறி கண்காட்சியில் வாங்கப்படும் பருத்தி ரக ஜவுளி களுக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடி யும், பட்டு ரக ஜவுளிகளுக்கு 10 சத வீதம் சங்க கழிவுடன் 20 சதவீதம்  அரசு தள்ளுபடியும் வழங்கப்படு கிறது.  குறிப்பிட்ட பட்டு ரக ஜவுளி களுக்கு 35 சதவீதம் முதல் 65 சத வீதம் வரை சிறப்பு கழிவு வழங்கப்படு கிறது. கைத்தறி கண்காட்சி அக்டோ பர் 23 ஆம் தேதி வரை தொடர்ந்து 14 நாட்களுக்கு நடைபெறும். மேலும், கண்காட்சியில் ரூ.65 லட்சம் மதிப்பிலான கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது.