districts

img

வயலில் கிடைத்த கற்சிலை  வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

 தஞ்சாவூர், மே 26-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செரு வாவிடுதி தெற்கு ஊராட்சி யில் பரவை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வயலில் மேடான இடத்தை சமப்படுத்துவதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.  அப்போது, வயலில் ஒரு கற்சிலை உடைந்த நிலை யில் கண்டெடுக்கப்பட்டது. இது தவிர வேறு இரண்டு சிலைகளின் உடைந்த பகுதியும் கண்டறியப்பட்டது. இப்பகுதியில், முற்காலத்தில் கோயில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் பழங்கால செங்கல் படிமங்கள் இருந்ததற்கான தடயங்கள் இப்பகுதியில் தென்படுகிறது.  இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாமி சிலை மற்றும் உடைந்த பாகங்கள், ஒரு பழங்கால சங்கு ஆகியவற்றை மீட்டு, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.  இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இப்பகுதியில் ஏற்கனவே முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள கற்சிலைகள் விஷ்ணு சிலை போல தெரிகிறது. இந்த பகுதியில் தொல்லியல் துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தால் பழங்கால வரலாற்றின் அடையாளங்கள் கிடைக்கும் என தெரிவித்தார்.