தஞ்சாவூர், ஜூலை 9 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், முதலாவது ஒன்றிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை ஒன்றியப் பொறுப்பாளர் என்.ஜெயபால முருகன் தலைமை வகித்தார். எஸ்.மணிகண்டன் கொடியேற்றி வைத்தார். கே.கோட்டைத்துரை வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.கஸ்தூரி துவக்க உரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம். செந்தில்குமார், தமுஎகச மாவட்ட நிர்வாகி முருக.சரவணன், வாலிபர் சங்க நிர்வாகி மோரிஸ் அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத்தலைவர் டி.கணேசன் நிறைவுரையாற்றினார். நிறைவாக டி.கோபி செல்வம் நன்றி கூறினார். மாநாட்டில் ஒன்றியத் தலைவராக என்.ஜெயபால முருகன், செயலாளராக டி.கோபிச் செல்வம், பொருளாளராக கோட்டைத்துரை, துணைத் தலைவர்களாக ஆர்.சின்னமணி, எஸ்.மணிகண்டன், துணைச் செயலாளர்களாக ஏ.வினோத்குமார், கே.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 19 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில், “ஊனமுற்றோருக்கு ரூ.3000, கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5000 மாதாந்திர உதவித்தொகையாக வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசு உத்தரவாக 4 மணிநேர வேலையும், முழு சம்பளமும் வழங்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியரின் மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டத்தில், பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்தில் தீர்வு காண வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.