districts

img

நல்லவன்னியன்குடிகாடு கிராமத்தில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

அம்மாப்பேட்டை, ஜூலை 2 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப் பேட்டை அருகே நல்லவன்னியன்குடி காடு கிராமத்தில் அரசுப் பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.  நல்லவன்னி யன்குடிகாடு கிராமம் பேருந்து வசதியே கண்டிராத கிராமமா கும். இந்நிலையில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவா ஹிருல்லாவின் முயற்சியால் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நல்லவன்னியன்குடிகாடு, சங்கர தேவன் குடிகாடு, செண்பகபுரம் வழி யாக, வாண்டையார்இருப்பு வரை செல்லும் அரசுப் பேருந்து தடம் எண் A6 பேருந்து சேவைக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது.  பாபநாசம்சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஊராட்சி  ஒன்றியக் குழுதலைவர் கலைச் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.