districts

img

சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ரமேஷ் காலமானார்

தஞ்சாவூர், மே 7- தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினராக பணியாற்றிவரும், தொழிற்சங்கவாதியுமான கே.ரமேஷ் பெங்களூருவில் உள்ள தனது மகனின் இல்லத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக சனிக்கிழமையன்று காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினரும், சிறந்த தொழிற்சங்கவாதியுமான கே.ரமேஷின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியில் சேர்ந்து, பின்னர் மருந்து விற்பனை பிரதிநிதிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட சங்கத்தின் மாநிலப் பொறுப்புகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட அலுவலக பொறுப்பு மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக கே.ரமேஷ் சிறப்பாக செயல்பட்டார்.  தற்போது தனது மகனுடன் பெங்களூரில் வசித்து வந்தவர் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்து ள்ளார். அவரது மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழுவின் சார்பில் செவ்வணக்கம், செலுத்துகிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது. சிஐடியு அஞ்சலி தோழர் ரமேஷ் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தஞ்சை மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், முறைசாராத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், தோழர் ரமேஷின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். இதில், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.