districts

img

செஞ்சிலுவை சங்கப் பயன்பாட்டுக்கு ஆம்புலன்ஸ் வழங்கல்

தஞ்சாவூர், டிச.5 -  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில், அவசரகால ஊர்தியினை செஞ்சிலுவை சங்கம் பயன்பாட்டிற்காக செஞ்சிலுவைச் சங்கத் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ்  ஆலிவரிடம் தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கி யின் சமூக கூட்டாண்மை சார்பில் பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) கோவிந்த் நாராயண் கோயல் திங்களன்று நேரில் வழங்கினார். நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்கள் மரு.  என்.ஓ.சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ்.ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), பாரத ஸ்டேட் வங்கி துணைப் பொது மேலாளர் நவீன் குமார், உதவிப் பொது மேலாளர் ஆல்வின் மார்டின் ஜோசப் ஆல்பர்ட், செஞ்சிலுவை சங்கம் ராஜ மாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.