districts

img

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் கும்பகோணம் டிஎஸ்பி தகவல்

கும்பகோணம், மார்ச் 6- தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் வடமாநிலத் தொழிலாளர் களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமை வகித்தார். காவல் ஆய்வா ளர்கள் பேபி, சிவ செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பேசுகையில், ‘‘கும்ப கோணத்தில் சுமார் ஆயிரம் வெளிமாநி லத் தொழிலாளர்கள் பணி புரிந்து வரு கின்றனர். இதை தவிர ஆயிரக்கணக்கான வடமாநிலக் குடும்பங்கள் கும்பகோணத் தில் வசித்து வருகின்றன. வடமாநிலங்களில் இருந்து பல்வேறு  நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலா ளர்களிடம் தங்களது இருப்பிடம் தொடர்  பான ஆவணங்கள் பெறப்பட்டு வருகிறது.  வெளிமாநிலத்திலிருந்து பணிபுரிய வரும் தொழிலாளர்கள் தங்களது இருப்பிடம் தொடர்பான முழு ஆவணங்களையும் கை யில் வைத்திருக்க வேண்டும்.  மேலும் தங்களுக்கு ஏதேனும் அச்சு றுத்தல் ஏற்பட்டால் உடனடியாக காவல்  துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்காக 24 மணி நேரமும் காவல்துறை யினர் தயார் நிலையில் உள்ளனர்’’ எனத்  தெரிவித்தார்.