districts

சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் மரணம்

கும்பகோணம், டிச.2- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள  நாச்சியார்கோவில் சீனிவாசன் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது சினிமா தயாரிப்பாளர் முரளி தரன் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னை மண்ணடி புது தெருவை சேர்ந்த சினிமா  தயாரிப்பாளர் முரளிதரன் (65), மனைவி உத்ரா (60) ஆகி யோர் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாச பெருமாள்  கோவிலில் சாமி தரிசனம் செய்ய படிக்கட்டுகளில் ஏறும்  போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே  இறந்துவிட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் முரளிதரன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு சென்றனர் முரளிதரன் ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ என்ற தயாரிப்பு  நிறுவனம் மூலம் அன்பே சிவம், உன்னிடத்தில் என்னை  கொடுத்தேன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை  தயாரித்துள்ளார்.

;