districts

img

தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தின விழா

கும்பகோணம், மார்ச் 11- மகளிர்களின் பாலின சமத்து வத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு மகளிர்களின் சிறப்பு இயல்பு களை பெருமைப்படுத்தி உலகம் முழு வதும் மகளிர் தினம் மார்ச் எட்டாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது இதனொரு பகுதியாக கும்ப கோணத்தில் உள்ள மகளிர் அமைப்பு கள் இந்திய ஜனநாயக மாதர் சங்கம்  மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கும்பகோணம் கோவிந்தன் மஹாலில் சர்வ தேச மகளிர் தின விழா கொண்டாடப் பட்டது நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனைத் துத் துறை ஓய்வூதியர் சங்க வட்ட துணைத்தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். பெருமாண்டி ஊராட்சி  ஒன்றியப் பள்ளி ஆசிரியர் மா.சுதா மாணிக்  கம் வரவேற்றார். இந்திய தொழிற்சங்க மையம் மாவட்டத் தலைவர் ஜீவபாரதி துவக்கி வைத்தார்.  அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சங்கரி, சிஐடியு தஞ்சை மாவட்டத் தலைவர் எம். கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் செங்குட்டுவன், போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மணிமாறன், ஓய்வூதியர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜகோபாலன், வட்ட செயலாளர் கே. பக்கிரிசாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாநகரப் பொருளாளர் ராஜேஸ்வரி, மாதர் சங்க மாநகரச் செயலாளர் சுமதி ஆகி யோர் கலந்துகொண்டனர்.