தஞ்சாவூர், ஜூலை 6- நாட்டுப்புறக் கலைகளையும், கலை ஞர்களையும் பேணி வளர்ப்பதற் கும் தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடு வதற்கும். கலைஞர்களுக்கு நல் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ‘சங்க மம்- நம்ம ஊரு திருவிழா’ என்ற பெய ரில் விழா நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தினை தஞ்சாவூரில் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களைக் கொண்டு “தஞ்சை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” 12.7. 2024 மற்றும் 13.7.2024 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் குந்தவை நாச்சி யார் அரசு மகளிர் கலைக் கல்லூரி அரு கில் உள்ள தஞ்சாவூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய விளையாட்டுத் திடலில் நடத்தப்படவுள்ளது.
இவ்விழா, தஞ்சாவூர் மண்டலத் தில் உள்ள பாரம்பரிய பல்வேறு நாட்டுப் புறக் கலைகளைக் கொண்டு நடத்தப் படவுள்ளது. இன்றைய காலக்கட்டத் தில் உள்ள நையாண்டி மேளம், கரகாட் டம், காவடியாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், ஆண்கள், பெண்கள் தப்பாட் டம், நாட்டுப்புறப் பாடல், கிராமிய பல்சுவை, காளியாட்டம் நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், அழிந்து வரும் கலைகளில் அரிய வகையான கலை களான பொம்மலாட்டம், கொம்பு வாத்தியம், இலாவணி, பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கலைகளை தஞ்சாவூர் மண்ணில் பறைசாற்றும் நிகழ்வாக நிகழ்த்துக் கலைகள் நடத்தப் படவுள்ளன.
மேலும், பேண்டு வாத்தியம், சிலம் பாட்டம், புலியாட்டம், மல்லர் கம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இம்மே டையில் அரங்கேற்றம் செய்யப்பட வுள்ளன என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். கலந்தாலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள நம்ம ஊரு திருவிழா தஞ்சை சங்கமம் விழா மற்றும் உணவுத் திருவிழா முன்னேற் பாடு பணிகள் குறித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் தலைசிறந்த உணவு வகைகள் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட உணவு நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வகையில் உணவுத் திரு விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் செய்து வருகின்றனர். அதேபோல் நம்ம ஊரு திருவிழா - தஞ்சை சங்கமம் நிகழ்ச்சியை பாதுகாப்பாக ஒருங்கிணைத்து நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.