பட்டுக்கோட்டை, டிச.17- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரம், துவரங் குறிச்சி கிராமம் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொ டர்ந்து, துவரங்குறிச்சி, மாரியம்மன் கோவிலில் விவசாயி களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு, பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் ச.மாலதி தலைமை வகித்து பேசுகையில், “சம்பா நெற்பயிருக்கு பின் மாற்றுப் பயிராக, நெல் வரப்பில் உளுந்து பயிரிடுவதினால் அதிக லாபம் கிடைக்கும். அதே போல் சோயா சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். அதன் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண்துறை அலுவலர்கள் விளக்கம் தரத் தயாராக உள்ளனர்” என்றார். பட்டுக்கோட்டை விதை ஆய்வாளர் நவீன் சேவியர், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை கல்லூரியின் நோயி யல் துறை உதவி பேராசிரியர் கரண் ஆகியோர் பேசினர். நெற்பயிரில் நானோ யூரியா பயன்படுத்துவதன் நன்மை கள், உர மேலாண்மை உத்திகள், அதிக உரப் பயன்பாட் டால் ஏற்படும் தீமைகள், சிறுதானிய பயிர்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில், துவரங்குறிச்சி விவசாயி ராமையன் என்பவரின் பண்ணை வீட்டில் தங்கி, கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சி பெறும் புஷ்கரம் வேளாண்மை கல்லூரி யின் இறுதியாண்டு மாணவர்கள், முன்னோடி விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர் மகரஜோதி, ஊராட்சி மன்ற தலை வர் மல்லிகா சீனிவாசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.