districts

விவசாயிகள் சங்க போராட்டம் எதிரொலி வாய்க்கால் தூர்வாரப்படும்: அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், ஜூன் 7 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட் டம் எதிரொலியாக வாய்க்கால் ஆக்கிரமிப்பு களை அகற்றி தூர்வாரித் தர அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் கல்லணைக் கால்வாயில் இருந்து பூதலூர் அருகே கெங்கை சமுத்திரத்தில் பிரியும் வாய்க்காலில் (7/23) உடனடியாக, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரித் தர  வேண்டும். விவசாயத்தையும், விவசாயி களையும் காப்பாற்ற வலியுறுத்தி விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் காத்திருப் புப் போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து தஞ்சை சாலை பூதலூர் பனஞ்சாரி அருகே செவ்வாய்க்கிழமை நூற்றுக் கணக்கான விவசாயிகள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட திரண்டனர். இதையறிந்து அங்கு வந்த அதிகாரிகள் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வட்டாட்சியர்  பிரேமா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை யில், அரசுத் தரப்பில் காவல் உதவி ஆய்வா ளர் வெற்றிச்செல்வன், பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் புகழேந்தி மற்றும் வரு வாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் கலந்து கொண்டனர்.  விவசாயிகள் தரப்பில், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் பூதலூர் விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கெங்கை பாலு மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலை வர் எஸ்.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். இதில், “வருவாய்த்துறையினர் அளவீடு செய்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணி நடத்தப்படும்” என  வட்டாட்சியர் உறுதி அளித்ததன் பேரில்,  போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது.