districts

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், பிப்.2 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றி யம் வரகூர் கிராமத்தில் உள்ள நியாய  விலைக்கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்து,  இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.  மேலும், இந்த நியாய விலைக் கடை யில், குடும்ப அட்டைதாரர்கள் அதிகம் உள்ள தால், எந்நேரமும் கூட்ட நெரிசலாக உள்ளது.  இதனை கட்டுப்படுத்த நியாய விலைக் கடையை இரண்டாக பிரித்து அமைத்துத் தர வேண்டும்.  அத்தியாவசியப் பொருட்கள் பொது மக்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு கூடுதல் பணி யாளர்களை நியமிக்க வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,  பிப்.2 (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கூட்டு றவு சார்பதிவாளர் செல்வி, நியாய விலைக்  கடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில், போ ராட்டக் குழுவினருடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தினார்.  அதில், கோரிக்கையின் உண்மை நிலையை  உணர்ந்து, சேதமடைந்த நிலையில் உள்ள கடையை, உடனே அருகில் இருந்த சமுதா யக் கூடத்திற்கு மாற்றுவதுடன், கடையை இரண்டாக பிரிக்கும் ஆணை வரும் வரை, நட மாடும் நியாய விலைக்கடை திட்டத்தின் மூலம்  பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார். அத னைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.  அமைதி பேச்சுவார்த்தையில் சிபிஎம்  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.மதியழ கன், எம்.ராம்,  ஆர்.பிரதீப்ராஜ்குமார், கட்சி  கிளைச் செயலாளர் பாபு மற்றும் சேவியர், அனந்தன், ஊர் நாட்டாமை கலந்து கொண்ட னர்.