தஞ்சாவூர், பிப்.7 - மேட்டூர் அணை மூடப் பட்டதால், தஞ்சாவூர் அருகே அறுவடைக்குத் தயா ராகி வரும் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் தண்ணீ ரின்றி காய்ந்து வருகின்றன. மேட்டூர் அணை வழக் கம்போல ஜனவரி 28 ஆம் தேதி மூடப்பட்டது. என்றா லும், டெல்டா மாவட்டங்க ளில் பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி சாகுபடி நடை பெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் அறு வடைக்குத் தயாராகி வரும் நிலையில் உள்ளன. இந்நிலையில், தஞ்சா வூர் அருகே மானோஜிபட்டி, வண்ணாரப்பேட்டை, சித்தி ரக்குடி, ஆலக்குடி உள்பட பல்வேறு பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற்ப யிர் சாகுபடி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது பயிர்கள் கதிர்விட்டு, 20 நாள்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மேட்டூர் அணை மூடப்பட்டதால் கல்லணைக் கால்வாயில் தண்ணீர் வரு வதும் நின்றுவிட்டது. இதனால் இப்பகுதி களில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் காய்ந்து வரு கின்றன. இதனால், விவசாயி கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார் ஆகி யோர் கூறுகையில், “ஏற்கெ னவே நவம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மீண்டு வந்து விவசாயிகள் மறு நடவு செய்தனர். தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறு வடைக்குத் தயார் நிலை யில் உள்ளன. இந்நேரத்தில் மேட்டூர் அணை மூடப்பட்ட தால், தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து வருகின்றன. இத னால், என்ன செய்வது எனத் தெரியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதேபோல் பட்டுக் கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக் கூர் உள்ளிட்ட கடைமடைப் பகுதியிலும் சாகுபடி செய்யப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. விவசாயிகளின் நிலையை உணர்ந்து மேட்டூர் அணையை 25 நாள்க ளுக்குத் திறந்து, கல்லணைக் கால்வாயில் கருகும் பயிர் களை காத்திட தண்ணீர் விட அரசு நடவடிக்கை எடுத்தால், இப்பயிர்களைக் காப்பாற்றி விடலாம்” என்றனர்.