districts

img

அபராதம் எனக் கூறி மக்களை துன்புறுத்தாதீர்! சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், நவ.3- தமிழக அரசின் போக்கு வரத்துத்துறை ஒன்றிய அரசின் நாசகர மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத் தில் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கும்ப கோணம் தலைமை தபால்  நிலையம் முன்பு சாலை  போக்குவரத்து தொழிலா ளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க கும்பகோ ணம் மாநகர தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாநக ரச் செயலாளர் கார்த்தி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநகரச்  செயலாளர் சாமிநாதன் முன் னிலை வைத்தனர். சாலை  போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாநிலப் பொருளா ளர் பி.பார்த்தசாரதி, ஆட்டோ சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மாநிலக் குழு உறுப்பினர் சாமிநாதன், மாநகர கௌரவ தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்ட திருத்த தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் ஒன்றிய அரசு விதிக்கும் தொழிலாளர் சட்  டத்தை திரும்பப் பெற வலி யுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.