தஞ்சாவூர், ஆக.13 - நாகப்பட்டினம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருவாரூர் மாவட் டம் திருத்துறைப்பூண்டியை அடுத்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, கீழ்வே ளூர் வட்டத்திற்கு உட்பட்டது கீழையூர்.
சிற்றூரான இவ்வூரினைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் செள.கண்ணன், ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவ லர் செ.முகமது ஆரிபு ஆகியோர் இவ்வூர் சிவாலயம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென தொடர்பு கொண் டனர். இதன்பேரில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும் வர லாற்று ஆய்வாளருமான முனைவர் மணி.மாறன், பொந்தியாகுளம் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜன், சக்க ராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கோ.ஜெய லெட்சுமி ஆகியோர் நேரில் அவ்வூருக்குச் சென்று கள ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து முனைவர் மணி.மாறன் தெரிவித்ததாவது: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தி லும், தற்போதைய நாகப்பட்டினம் மாவட் டம், கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் கீழையூர். இவ்வூர் தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக வைத்து பாடப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. கீழையூர் செம்மலைநாதர் கோயில் எனத் தமிழிலும், அருணாசலேஸ்வரர் கோயில் என வடமொழியிலும் அழைக்கப் படும் இக்கோயில் சோழர் காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற கோயி லாகத் திகழ்ந்திருக்கிறது.
இக்கோயில் கட்டுமானம், சிற்பங்கள் பெரும்பாலும் சோழர் காலத்தைச் சார்ந்தவை. பின் வந்த பாண்டியர் காலத்திலும் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு அம்ம னுக்கு சிறு ஆலயம் அமைக்கப்பட்டிருக் கிறது. அவர்களுக்குப் பிறகு சிதைவுற்ற நிலையில் இருந்த இக்கோயிலை, கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், அவர்களுக்குப் பின் வந்த தஞ்சை மராட்டிய மன்னர்களும் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் செய்திருப்பதை இக்கோயில் கட்டுமானத் தின் மூலம் அறிய முடிகிறது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள செம்ம லைநாதர் கோயில் கருவறைக்கு முன் முகமண்டபத்தின் வடபுறத்தில் தொடங்கி கருவறை, கருவறையின் பின்புறம் அதன் தொடர்ச்சியாகக் கோயிலின் தென்புறச் சுவர் முழுவதுமாக கல்வெட் டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இருப்பினும் கல்வெட்டுச் செய்திகள் பதிவு செய்யப்படாமலும், இதுகுறித்து வெளி யுலகம் அறிந்து கொள்ள முடியாமலும் இதுவரை இருந்து வருவது பெரும் வியப்பு. கீழையூர் சிவாலயத்து கல்வெட்டு களில் பழமையானதாகக் காணப்படுவது முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியே ஆகும்.
இச்செய்தியினை, ‘திருமன்னி வளர இருநில மடந்தையும்’ எனத் தொடங்கும் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்து தூண் கல்வெட்டால் அறிய முடிகிறது. இக்கோயில் வெளிப்புறச் சுவற்றில் திரிபு வன சக்கரவர்த்திகள் இரண்டாம் இராச ராசன் மற்றும் இராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், பராக்கிரம பாண்டியன் போன்றோரின் கல்வெட்டு கள் காணப்படுகின்றன.
இவ்வூர் கல்வெட்டுகளில் இராஜராஜ சோழ வளநாட்டு, அளநாட்டு பிரம்ம தேசம், ஸ்ரீ ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் ஸ்ரீ சிவபாத ஈஸ்வர முடையார் என்றும், இவ்வூரின் மையத்தில் உள்ள விஷ்ணு கோயில் ஜலசயன பெரு மாள் கோயில் என்றும் அழைக்கப் பெற்றுள் ளதை இக்கோயில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
பிராமணர்களுக்கும், வெள்ளாளர் களுக்கும் இருந்து வந்த குடியுரிமை குறித்தும், நிலப் பரிவர்த்தனை ஒப்பந்தம் பற்றியும், சாட்சிகளாக ஆலத்தூர் திரு வரங்கப் பட்டன், அனந்த நாராயண பட்டன், கனகசிவ பட்டன், மூவாயிரப் பிரியன், குரவைச்சேரி ஸ்ரீகிருஷ்ண பட்டன் ஆகியோர் பெயர்களும் கல் வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் பணியாற்றிய தச்சர் பெயராக ரதவடிவ பெருந்தச்சன், மூவா யிர பிரம பெருந்தச்சன், திருச்சிற்றம்பல தட்டான் போன்ற பெயர்களும் அவர்கள் பயன்படுத்திய அளவுகோல் ‘தேவார் கண்ட பெருங்கோல்’ என்றும் குறிக்கப் பட்டுள்ளது. மன்னனின் ஆட்சியாண்டு குறிக்கப்ப டாமல், எதிராமாண்டு என்ற குறிப்பும், அமரபட்சம், உத்திராட நாள், திரயோ தசி என்ற குறிப்பும் கல்வெட்டில் காணப் படுகிறது.
திருப்பள்ளி எழுச்சி, திருக கார்த்திகை திருவிழா, அமுது படைய லுக்கு நிலதானம், அதன் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. ஊர்களின் பெயராக இராஜராஜ சோழநல்லூர், மீனவநல்லூர், முடி கொண்ட சோழநல்லூர், இராஜேந்திர சோழநல்லூர் போன்றவையும் செம்பி யன்மாதேவிப் பேரேரி, சோழன் சிறு கரைப் பேரேரி, திருவரங்கவதி என்ற நீர்நிலைப் பெயர்களும், அக்காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்களின் பெயர் களான ராராபுரத்து அச்சு காசு, வாசி ஏற்றின காசு போன்ற பெயர்களும் காணப்படுவதோடு, கல்லில் வெட்டினவர் பெயர்களாக கூத்தன் எழுத்து, ஆலத்தூர் திருவேங்கடமுடையான் பட்டன் எழுத்து, மாமண்டூர் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி எழுத்து, குண்டூர் ஸ்ரீ ராமபட்டன் எழுத்து, ராமீஸ்வரமுடையார் திருச்சிற்றம்பலம் பிரியன் எழுத்து, ஸ்ரீஇளங்கோ பட்டன் எழுத்து, கடவூர் கனகசபாபதி பட்டன் எழுத்து, திருவெண்காட்டு பட்டன் எழுத்து, திருவீழிமிழலை பட்டன் எழுத்து போன்ற பெயர்களும் கல்வெட்டில் காணப்படு கின்றன.
ஆயிரம் ஆண்டு பழமை மிக்க கீழை யூர் சிவாலயத்தின் சிறப்பினையும், அவ்வூரின் வரலாற்றினையும் முழுமை யாக அறிய இங்குள்ள கல்வெட்டுகளைப் படி எடுத்தால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் நமக்குக் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.