தஞ்சாவூர், மார்ச் 14- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங் கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊரக வளர்ச்சி துறையில் நடைமுறை சாத் தியமற்ற இலக்குகளைத் திணித்தும், முறையான திட்ட மிடல் இன்றியும் திட்டப் பணி களை நடைமுறைப்படுத்தி துறைத் திட்டங்களைப் பாழ் படுத்தும் அலுவலர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி யும், கோரிக்கைகளை நிறை வேற்றாமல் காலதாமதம் செய் யும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலர் உள் ளிட்ட ஒட்டுமொத்த உயர் அலுவலர்களின் போக்கைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜன் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கை.கோவிந்த ராஜன், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.ரங்கசாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் நல்லமுத்து, மாவட் டச் செயலாளர் தியாகரா ஜன், பொன் .இராஜேந்தி ரன், ஆதி.ஜெயராமன், அரசு ஊழியர் சங்க நிர்வகி நட ராஜன் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி கலா, லதா, சௌந்தரபாண்டியன், மாரி. தெட்சிணாமூர்த்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.