districts

img

டெல்டா ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பாபநாசம், ஜூன் 9 -  அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் ஒரே நாளில் 60 சேவைத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார். செயலர் முகமது ரஹ்மத்துல்லா சேவை திட்டங்கள் குறித்துப் பேசினார். வருங்கால ஆளுநர் லியோன் பேசினார். 

இதில் ஒருவருக்கு பசுமாடு, விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு இயந்திரம், யூரியா, ஜிப்சம், சலவைத் தொழிலாளிக்கு அயர்ன் பாக்ஸ்,  முடித் திருத்தும் தொழிலாளிக்கு உதவக் கூடிய பொருட்கள், மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை, யூனிபார்ம், ஒருவருக்கு மூக்கு கண்ணாடி வாங்க உதவித்தொகை, கண்ணில் லென்ஸ் பொருத்திக் கொள்ள உதவித் தொகை,  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, உதவிபெ றும் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள், மாணவர் களுக்கு எழுதுபொருட்கள், ஏழ்மை நிலையிலுள்ளவர்கள், திருநங்கை களுக்கு மளிகைப் பொருட்கள், ஒருவருக்கு வீடு கட்ட உதவித் தொகை, ஒரு வருக்கு படுதா, திருச்சேறை சுடர் மாற்றுத் திறனாளி பள்ளிக்கு சக்கர நாற்காலி, தட்டு, டிரஸ், மளிகைப் பொருட்கள், சுகாதார பொருட்கள் உள்ளிட் டவை வழங்கப்பட்டன. 

இதில் உதவி ஆளுநர் வெங்கடேசன், ஆலோசகர் காதர் பாட்சா உள்பட  கும்பகோணம், தஞ்சாவூர் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் பங்கேற்றனர்.