districts

கடல் உணவுப் பொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

தஞ்சாவூர், பிப்.24- தமிழக அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மீனவர்கள் வாழ்வாதாரம் காத்திடும் வகையில், எங்களது கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் மல்லிப் பட்டினம் ஏ.தாஜூதீன், தமிழக முதல்வர் மற்றும் நிதி அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.  இதில் கூறியிருப்பதாவது, ‘‘நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு வரி நீக்கம் செய்யப் பட்ட டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரி இல்லாத டீசல் வழங்க வேண்டும். மானியத்தில் வழங்கப்பட்டு வரும் டீசலை மாதந்தோ றும் என்ற அளவு நிர்ணயம் செய்யா மல், அந்த நிதி ஆண்டு முழுவதும் வழங்க வழிவகை செய்து தரவேண்டும்.  தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில், இயற்கை இடர்பாடுகளிலிருந்து படகுகள் சேத மடைவதைத் தடுக்க தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். தஞ்சை மாவட்டம் முழுவதும் மீன்பிடி படகு களை பாதுகாப்பாக நிறுத்த முகத்துவா ரங்களை தூர்வாரித் தரவேண்டும்.  மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி அமைத்து தர வேண்டும். மீன்பிடி மற்றும் அதைச் சார்ந்த தொழில் புரியும் மீனவர்கள் கடன் பெறுவதற்கு ஏதுவாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விதிமுறைகளை எளிமையாக்கி தரவேண்டும்.  தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்ட விதிமுறை களில், படகு அளவு மற்றும் வகை வாரி யாக அந்தந்த மாவட்டத்திற்கு உள்ள மீன்பிடிப்பு முறைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கவும், அபராதத் தொகையை குற்றங்கள் வாரியாகவும், படகுகளின் வகை வாரியாகவும் பிரித்து நிர்ண யிக்க வேண்டும்.  மீனவர்கள் பிடித்து வரும் இறால் மற்றும் மீன்களின் விலைகளை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். கடல் உண வுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாத்திட, தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான துறைமுகங்களில் குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.  இரண்டு மாத மீன்பிடித் தடைக் காலத்தின்போது, படகுகள் இயக்கப் படாமல் நிறுத்தி வைப்பதால் ஏற்படும் சேதங்களை தவிர்த்திட, மீன்பிடிப்பு பராமரிப்புக்கு படகு ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும். மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிர மாக உயர்த்தி தரவேண்டும்.  மல்லிப்பட்டினம், கள்ளி வயல்தோட்டம் பகுதியில் நவீன மீன் உலர்த்தும் தளம் அமைத்து தர வேண்டும். மீனவர்களுக்கு மானிய விலையில் மீன்பிடி வலை வழங்கிட வேண்டும்’’.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது.