கும்பகோணம், பிப்.21 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் (திகோ சில்க்ஸ்) செயல்பட்டு வருகிறது. அச்சங்கத்தின் விற்பனை பிரிவில் கடந்த பிப்.10 ஆம் தேதி முதல் பிப்.26 ஆம் தேதி வரை பட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் அரசு மானியம் மற்றும் தள்ளுபடி யுடன் கூடிய கைத்தறி நெசவு செய்யப்பட்ட தர மான அசல் வெள்ளி ஜரிகை கொண்ட பட்டுப் புடவைகள் விற்பனைக்கும், பழைய புடவை களை வாங்கிக் கொண்டு புதிய பட்டுப் புடவை வழங்கும் திட்டமும் உள்ளது. பட்டுப்புடவை தரம் பார்க்கும் கருவியும் அமைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரு கிறார்கள். இதில் முதன்முறையாக வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப, வாடிக்கையாளர்களே டிசைனை வடிவமைத்துக் கொடுத்தால், அதே போல் பட்டுப் புடவையை நெசவாளர் கள் கைத்தறி நெசவு செய்து தரும் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஏராளமான வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான டிசைனை தேர்வு செய்து வடிவமைத்து பட்டுப் புடவைகளை ஆர்டர் செய்து வருகின்றனர். இத்திட்டம் முதல்முறையாக செயல்படுத் தப்படுவதால் ஏராளமான வாடிக்கையா ளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதைத் தவிர விசேஷ காலமாக உள்ளதால் அனைத்து மதத்தினரும் அசல் பட்டு திகோ சில்க்ஸ்-ல் கிடைக்கும் என்று இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி ஏராளமானோர் பட்டுப் புடவைகளை வாங்கிச் செல்கின்றனர்.