districts

img

தோழர் மலேயா கணபதி நினைவிடத்தில் சிபிஎம் அஞ்சலி

தஞ்சாவூர், மே 4 - மலேயா தொழிலாளர்கள், தமிழர் களின் உரிமைகளுக்காக பாடுபட்ட தோழர் மலேயா கணபதியின் 73 ஆவது  நினைவு தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலை யில் உள்ள மலேயா கணபதி நினைவு  ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி க்கு பட்டுக்கோட்டை ஒன்றியச் செய லாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித் தார். நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், முத்துப்பேட்டை நகரச் செயலாளர் செல்லத்துரை, சுரேஷ், ராஜேந்திரன், சாமிகண்ணு, சிணுக்கர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

மலேயா கணபதி 
மலேயாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் கீழ் கூலிகளாக இருந்த தமிழர்கள் உழைப்புச் சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட போது, அவற்றிற்கு எதிராக புரட்சிகர  செயல்பாடுகள் மூலம் தொழிலாளர் களை ஒருங்கிணைத்து, மலேயா கணபதி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்.  நேதாஜியின் இந்திய தேசிய ராணு வத்திலும் மலேயா கணபதி இணைந்து பணியாற்றினார். அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தால் ஆங்கிலேய அரசு அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.  1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், காட்டுக்குள் பதுங்கி இருந்த மலேயா கணபதி ஆங்கிலேய காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப் பட்ட போது ஆயுதம் வைத்திருந்ததாக கூறி, அவருக்கு ஆங்கிலேய அரசு தூக்கு தண்டனை அறிவித்தது.  இந்தியாவில், நேரு முதல் பல்வேறு  பொதுவுடமை இயக்கத் தலைவர்கள், அவரை விடுவிக்க போராட்டங்களை நடத்தினர். இருந்தாலும் 4.5.1949 இல்  மலேயா கணபதிக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடப்படுவதற்கு முன்பு மலேயா கணபதி தமிழிலும், சீன மொழி யிலும் வீரம் செறிந்த உரை நிகழ்த்தி னார். அப்போது மலேயா நாட்டு மக்க ளின் தன்னாட்சி விடுதலை, பாட்டாளி  மக்களின் பொருளாதார சமத்துவம், ஆங்கிலேயர்களின் ஆதிக்க கொடுங் கோன்மை ஆட்சியை அகற்றவும் உரத்த  குரலில் உரையாற்றினார்.

இறுதி உரை 
நிறைவாக, அவர் ஆற்றிய உரை  இன்றும் மலேயா மக்களின், தொழிலா ளர்களின் மனதை விட்டு மறையாதது. “மலேயா மண் மாற்றாரிடமிருந்து விடு தலை பெறட்டும், மலேயா நாட்டு தொழி லாளர் வர்க்கம் வெற்றி பெறட்டும், மலேயா நாட்டு மக்களுக்கு புது வாழ்வு  மலரட்டும், மலேயாவில் மட்டுமல்ல உல கின் எந்த ஒரு பகுதியிலும் அடிமை கொடு மைக்கு முடிவு விரைந்து கிடைக்கட் டும், இதுவே, என் இறுதியான உறுதி யான விருப்பம்; வாழ்க வையகம்” என்று  உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர். பின்னர், ஏகாதிபத்திய அரசால் அவர்  தூக்கிலிடப்பட்டதாக வந்த செய்தி உலகத் தொழிலாளர்களுக்கு பேர திர்ச்சியை தந்தது. அவர் பிறந்த ஊரான தம்பிக்கோட்டையில் அவருக்கு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.