கும்பகோணம், ஜன.19- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் நத்தம் கிராம பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன் மகன் பஞ்சமூர்த்தி. இவர் தனியாரிடம் கடன் பெற்று சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள மணப்பாறை ரக மாடுகளை வாங்கியுள்ளார். இவர் மணல் மாட்டு வண்டி தொழிலா ளர் சங்கத்தின் (சிஐடியு) வழிகாட்டுதலின் படி, அரசு அனுமதி பெற்று, திருப்புறம்பி யம் குவாரியிலிருந்து மணல் ஏற்றி வந்து விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் வியாழனன்று திருப்புறம் பியம் குவாரியில் இருந்து மாட்டு வண்டி யில் மணலை ஏற்றிக் கொண்டு வரும்போது, தேவனாஞ்சேரி மன்னியாற்று பாலம் அரு கில் திடீரென்று ஒரு மாடு மயங்கி விழுந் தது. இதுகுறித்து கொத்தங்குடி கால்நடை மருத்துவர் பிரகாஷுக்கு தகவல் தெரி விக்கப்பட்டு, மாட்டை பரிசோதித்தபோது மாடு இறந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விவசாய தொழி லாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் நாக ராஜன், மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க தலைவர் கோவிந்தராஜ், சிபிஎம் கும்ப கோணம் ஒன்றியக் குழு உறுப்பினர் சுதா கர் ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டனர். பின்னர் குமரன்குடி கிராம நிர்வாக அலுவலர் ராணிக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், மாட்டு வண்டி தொழிலா ளர் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அன்றாடம் ஜீவன் நடத்து வதற்கு உறுதுணையாக இருந்து மாட்டின் இறப்பால் பஞ்சமூர்த்தியின் குடும்பத்தின் வாழ்வாதரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அரசு, தொழிலாளி பஞ்ச மூர்த்திக்கு இழப்பீடு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும், வருங்காலத் தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் பயன்படுத்தும் மாடுகளுக்கு அரசே இல வச காப்பீடு செய்து தர வேண்டும் என வும் கோரிக்கை விடுத்தனர்.