districts

img

பேராவூரணி ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர், ஜூன் 5-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஸ்ரீ வெங்க டேஸ்வரா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா  நடந்தது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழுமச் செயலாளர் அமர்வாஞ்சிதா தலைமை வகித்தார்.  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் செல்வம் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு, சிறப்பிடம் பெற்ற மாண வர்களுக்கு பதக்கங்கள் அணிவித்தும், பட்டமளித் தும் பேசினார்.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத் தாளாளர் ஜீவகன் அய்யநாதன் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசி னார்.

பட்டமளிப்பு விழாவில், இளங்கலை, முது கலை மாணவிகள் 847 பேருக்கும், கல்வியி யலில் 252 பேருக்கும் என மொத்தம் 1,099 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், பல்கலைக்கழக தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற வர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத் தலைவர் மு.கி.லெனின், கல்விக்  குழும நிர்வாகிகள், அறங்காவலர்கள், கல்லூரி,  கல்வியியல் கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணி யாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.