districts

தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து  அவதூறு பரப்பிய ஒப்பந்ததாரர் கைது

தஞ்சாவூர், ஜூன் 6 -  தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக ஒப்பந்ததாரரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி யின் தற்போதைய ஆணை யராக இருப்பவர் இரா.மகேஸ்வரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது, ஒப்பந்தப் பணி வழங்குவது தொடர்பாக இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த ஒப் பந்ததாரர் கே. சுடர்மணிக் கும் (56) முரண்பாடு ஏற் பட்டது.

இந்த முன் விரோதம் கார ணமாக தன்னைப் பற்றி சமூக வலைதளத்தில் தவறான  தகவல்களைக் கூறி அவ தூறு பரப்பி வருவதாக சுடர்மணி மற்றும் மன்னார் குடியைச் சேர்ந்த பாலு மீது தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் ஆணையர் மே 31 ஆம் தேதி புகார் அளித்தார்.   இதன் பேரில் சுடர்மணி, பாலு மீது மேற்கு காவல் துறையினர்  ஜூன் 2 ஆம் தேதி வழக்குப் பதிந்து விசா ரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, சுடர் மணியை காவல் துறையினர் புதன்கிழமையன்று மாலை கைது செய்தனர்.