தஞ்சாவூர், ஜூன் 30- கட்டி முடிக்கப்பட்டும் வகுப் பறை திறக்கப்படாத நிலையில், மரத்தடியிலும், வகுப்பறை வராண் டாவிலும் அமர்ந்து மாணவர்கள் படிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி பேரூராட்சிக்குட்பட்ட நாட்டா ணிக்கோட்டை வடக்கு நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் இடப்பற்றாக்குறை காரணமாக 2020 - 2021 ஆம் ஆண்டு, விரி வான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு, பணி முடிந்து இதுவரை திறக்கப் படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் மரத்தடியிலும், பள்ளி வராண்டா விலும் அமர்ந்து படித்து வருகின்ற னர். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த அங்கன்வாடி கட்டிடம் பழுத டைந்த நிலையில் இடித்து அகற் றப்பட்டு இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. அதே போல் பள்ளியின் சத்துணவு மைய மும் கதவுகள் சேதமடைந்த நிலை யில் உள்ளன. எனவே, மாணவர்களின் நலன் கருதி, கட்டி முடிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை திறந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சத்துணவு மைய கட்டிடத்தை சீரமைத்து தரவும், அங்கன்வாடி கட்டிடத்தை புதிதாக அமைத்து தரவும் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பள்ளியின் நிலை குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பேராவூரணியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.