districts

img

தோழர் முத்துசுந்தரம் நினைவேந்தல்

குடவாசல்,  ஜூலை 30 - அரசு ஊழியர் சங்கத்தின் திருவாரூர்  மாவட்டம் குடவாசல் வட்ட கிளை சார்பாக அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும் களப் போராளியுமான மறைந்த தோழர் இரா. முத்துசுந்தரம் நினைவேந்தல் நிகழ்ச்சி குடவாசல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர் விக்னேஷ்வரர் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் கே.அன்பழகன் முன்னிலை வகித்தார். நினைவேந்தல் நிகழ்ச்சியில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.சி. குமார், சங்கத்தின் முன்னாள் தலைவர்  எம்.ராஜமாணிக்கம் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். சங்கத் தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து  கொண்டனர்.