தஞ்சாவூர், ஜூலை 18 - கூட்டுறவு சங்கங்களின் நடை பெறும் முறைகேடுகளை கண் டித்து, தஞ்சாவூரில் வியாழக்கிழ மையன்று விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த முற்றுகை போரா ட்டத்துக்கு சங்கங்களின் ஒருங்கி ணைப்பாளர் எல்.பழனியப்பன் தலைமை வகித்தார்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தர.விமல் நாதன், தமிழக நலிவுற்ற விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் முக மது இப்ராஹிம், தேசிய தென் னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தின் மாநிலச் செயலாளர் சாமி.மனோ கரன், தஞ்சாவூர் மாவட்ட விவசாயி கள் நலச் சங்கத்தின் செயலாளர் வி.கே.சின்னதுரை, கூட்டமைப்பின் தலைவர்கள் வி.எஸ்.வீரப்பன், என். செந்தில்குமார், செயலாளர் மணி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
போராட்டத்தில், “தஞ்சாவூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்க ளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில் நடைபெறும் முறை கேடுகளை கண்காணித்து அதனை சரிசெய்ய வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி யும் வங்கி கணக்கில் வரவு வைக்கா ததை கண்டித்தும், கணக்கில் வரவு வைக்காமல் விவசாயிகள் மீண்டும் கடன் பெற தகுதி இல்லாமல் செய் வதை கண்டித்தும், விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் பங்குத் தொகை மற்றும் சேமிப்பு தொகை செலுத்தியும் ரசீது வழங்காததை கண்டித்தும், விவசாயிகளுக்கு தேவையான விவசாய நகைக் கடன் வழங்கவும், நகைக் கடனுக்கு தொகையை திருப்பிச் செலுத்தியும் நகையை வழங்காமல் இருப்பதை கண்டித்தும், கூட்டுறவு சங்கத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களால் நிகழும் முறைகேடுகளை தடுக்கத் தவறிய நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கூட்டுறவு சங் கங்களின் இணைப்பதிவாளரிடம் வழங்கினர்.