தஞ்சாவூர், நவ.7- தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் முதன்முறையாக 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. அவருடைய உறுப்புகள் சென்னை, மதுரை மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
மூளைச்சாவு
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஆண் கடந்த நவ.3 ஆம் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக் காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி அவருக்கு மூளை செயலிழப்பு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள், அவருடைய குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு களை தானம் செய்வதாக மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கந்தசாமி, தேவ ராஜன், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ரவிக் குமார் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம், இதய வால்வுகள், நுரை யீரல், கல்லீரல் ஆகியவற்றை எடுத்து 5 பேருக்கு தானமாக அளித்தனர்.
முதன்முறையாக
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் முதன் முறையாக, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டு தல்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானமாக பெறப் பட்டன. எனது தலைமையிலான மருத்துவக் குழு மற்றும் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட குழுக்களுடன் ஒருங்கிணைந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, பதிவு மூப்பு அடிப்படை யில் தஞ்சை மருத்துவக்கல்லூரி, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு வருக்கு பொருத்தப்பட்டது. இதய வால்வுகள் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு பவர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாராட்டுக்குரியது
சோதனையான காலகட்டத்திலும் இறந்த வரின் குடும்பத்தினர், இறந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்தது பாராட்டுக்குரி யது. உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் பலரை வாழ வைக்கலாம். தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து 1,585 பேரிடம் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 9,483 பேர் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மருத்துவ கண்காணிப்பா ளர் மருத்துவர் மருதுதுரை, நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், உதவி நிலைய மருத்துவ அதிகாரிகள் முகமது இத்ரிஸ், கவுதமன், லியோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.