districts

img

தஞ்சை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிய கருத்தரங்க கூடம் திறப்பு

தஞ்சாவூர், ஜூலை 27- தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவல கத்தில் கருத்தரங்கக் கூடத்தைக் காவல் துறை இயக்குநர் சங்கர் ஜிவால் வெள்ளிக் கிழமை திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவல கத்தில் புதிதாக கருத்தரங்கக் கூடம் கட்டப் பட்டுள்ளது. இதை தமிழ்நாடு காவல் இயக்கு நர் (டிஜிபி) சங்கர் ஜிவால் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், மத்திய மண்டல காவல் தலைவர் க.கார்த்திகேயன், தஞ்சா வூர் சரகக் காவல் துணைத்  தலைவர் ஜியாஉல் ஹக்,  மாவட்டக் காவல் கண்காணிப் பாளர்கள் ஆஷிஷ் ராவத்  (தஞ்சாவூர்), சீ.ஜெயக்குமார் (திருவாரூர்), ஹர்ஷ் சிங்  (நாகை), கே.மீனா (மயிலாடு துறை) ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து, காவல் துறை அமைச்சுப் பணியாளர்க ளிடம் காவல் இயக்குநர் பேசு கையில், “கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார். முன்னதாக, அலுவலக வளா கத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். 

இந்நிகழ்வில், உதவி காவல் தலை வர்கள் (தலைமையிடம்) ஸ்ரீநாதா, பாலாஜி,  தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய் வாளர் மணிவேல், உதவி ஆய்வாளர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.